Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரியேறும் பெருமாள் பட பாணியில் கல்லூரி மாணவர் தாக்குதல்...படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.!

madhankumar May 17, 2022 & 14:18 [IST]
பரியேறும் பெருமாள் பட பாணியில் கல்லூரி மாணவர் தாக்குதல்...படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.!Representative Image.

பள்ளி மாணவியிடம் பேசியதால் கல்லூரி மாணவரை மாணவியின் பெற்றோர்கள் கடத்தி சென்று அவர்கள் வீட்டில் வைத்து கட்டை, இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (48) சுந்தரி தம்பதி இவர்களுக்கு அருண் பிரகாஷ் (19) என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர். அருண் பிரகாஷ் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். 

நேற்று காலையில் வழக்கம்போல கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அவர் பல்லடம் அருகே வடுக்கம்பாளையத்தில் 16 வயது பள்ளி மாணவி ஒருவரிடம் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனையறிந்த மாணவியை பெற்றோர் மற்றும் சிலர் இணைந்து அருண் பிரகாஷை தங்கள் வீட்டிற்கு வா என கூறி அழைத்து சென்று பரிஎறும்பெருமாள் பட பாணியில் தனி அறை ஒன்றில் அடைத்துவைத்து கட்டை மற்றும் இரும்பு கம்பி கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். அடித்தாங்க முடியாமல் அருண் பிரகாஷ் அலறியுள்ளார். பின்னர் அவரை அந்த அறையிலேயே வைத்து பூட்டி வைத்துள்ளனர். பின்னர் அவரின் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்து வைத்துள்ளனர்.

இதனிடையே தங்களது மகன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் அருண் பிரகாஷ் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது எதிர்முனையில் அந்த மாணவியின் தந்தை அழைப்பை எடுத்து உங்கள் மகனை எங்கள் வீட்டில் வைத்து அடித்து அறை ஒன்றில் அடைத்து வைத்துளோம் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அருண் பிரகாஷ் பெற்றோர்கள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து மாணவனின் பெற்றோரிடம் விசாரித்த போது எனது மகனை 8 பேர் கொண்ட கும்பல் அறையில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். இந்தக் கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வேண்டுமென்றும் தங்களது மகன் மற்றும் குடும்பத்தினருக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்