Rain Update : சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென கொட்டி தீர்த்த கன மழையால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சென்னையில், பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனையடுத்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதியில் வெயில் தணிந்தது.
கனமழை
இந்நிலையில், சென்னையில் பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, நசரத்பேட்டை, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம், அம்பத்தூர், பாடி, கொரட்டூரிலும் திடீரென பெய்த பலத்த மழையால் கடைகள் மற்றும் வெளியே வந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். திடீரென பெய்த கனமழையால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் உற்ச்சாகத்துடன் சென்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…