Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கல்லூரி மாணவர் அடித்து கொலை...வேலூரில் அதிர்ச்சி..!

madhankumar May 27, 2022 & 14:19 [IST]
கல்லூரி மாணவர் அடித்து கொலை...வேலூரில் அதிர்ச்சி..!Representative Image.

வேலூர் அருகே குடும்பத்தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டத்துக்கு உட்பட்ட சின்ன லத்தேரி கிராமத்தைச் சேர்ந்த தருண் குமார் (20) இவர் குடியாகம் அருகில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார். இவரின் பெற்றோர்கள் பெங்களுருவில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதனால் தருண் குமார் தனியாக வீட்டில் வசித்துவந்துள்ளார். 

அதே பகுதியில் உள்ள தருண்குமாரின் மாமா ரமேஷின் மகள் வேறு ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்த தருண்குமார், அதுகுறித்து ரமேஷிடம் தெரிவித்தபோது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. திடீரென தருண்குமாரை, ரமேஷ் தாக்கியுள்ளார். இதை பெங்களூருவில் உள்ள பெற்றோரிடம் செல்போன் மூலம் தருண்குமார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சொந்த ஊரிற்கு திரும்பிய தாய் கிரிஜா ரமேஷின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார், அப்போது ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் தருண் குமாரை தென்னை மட்டையால் தாக்கியுள்ளனர் தடுக்க முயன்ற கிரிஜாவையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தருண்குமார் நேற்று காலை உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின்பேரில் லத்தேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரமேஷின் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்