Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜன்னல் திரையை சரி செய்யும்போது நடந்த விபரீதம்...5வது மாடியில் இருந்து விழுந்த மாணவி.!

madhankumar June 17, 2022 & 16:41 [IST]
ஜன்னல் திரையை சரி செய்யும்போது நடந்த விபரீதம்...5வது மாடியில் இருந்து விழுந்த மாணவி.!Representative Image.

கர்நாடக மாநிலம் மங்களூர் நகர், கத்ரி அருகே உள்ள கங்கநாடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் 5வது மாடியில் வசித்து வருபவர் முகமது இம்தியாஸ் (48). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவரது முதல் மகளான சேஷையர் இன்தியாஜ் (15) பிஜய் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பால்கனியில் நாற்காலியை போட்டு திரைசீலையை சரி செய்துகொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி வீட்டின் வெளிப்புறம் கீழே விழுந்துவிட்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் அவருக்கு தலை மற்றும் கால்முறிவு ஏற்ப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவிக்கு தீவிர சிகிச்சை அழைத்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலனின்றி உயிரிழந்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக மங்களூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பால்கனியில் திரையை சேர் மீது ஏறி சரி செய்தபோது தவறிக் கீழே மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்