புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்ற நினைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கீழ நாஞ்சூரைச் சேர்ந்தவர் அய்யப்பன் (26), இவர் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவருடன் அய்யப்பனுக்கு பழக்கம் இருந்து வந்துள்ளது. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்த அய்யப்பன், கடந்த ஏப்ரல் மாதம் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதன் பின்னர் 6 மாதங்கள் கழித்து தான் காதலித்து வந்த பெண்ணுக்கே தெரியாமல் அய்யப்பன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து தான் ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றப்பட்டதை அறிந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு இளம் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதிபடுத்தியுள்ளனர். இதனையடுத்து இளம் பெண் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அய்யப்பன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…