இலங்கை தலைநகரம் கொழும்புவில் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிக்கு எதிராக கொழும்பு கோட்டை பொலிசார் இன்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
இலங்கை திவாலாகி கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசுக்கு எதிராக பலரும் போராடி வருகின்றனர். மஹிந்தா ராஜபக்சே பதவி விலகி ஓடிவிட்டாலும், அதிபர் கோத்தபயாவும் பதவி விலக வேண்டும் என இன்னும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் கொழும்புவில் மாணவர்கள் ஒன்றுகூடி போராடி வரும் நிலையில், அவர்கள் பேரணி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பல இடங்களிலும் நுழைவதற்கு தற்போது நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதே சமயம் தடை விதிக்காத பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுவதையோ அல்லது சட்டவிரோதமான நடத்தையையோ தவிர்த்துக் கொள்ளுமாறும், எந்தவொரு பொது சொத்துக்கும் சேதம் விளைவிக்காமல் எதிர்ப்பு ஊர்வலத்தை முன்னெடுக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…