அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த டி ராஜேந்தர் நாளை சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழ் திரைபட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என வலம் வந்த டி.ராஜேந்தர் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், அவரது மகனும் நடிகருமான சிம்பு மற்றும் அவரது குடும்பத்தினர் டி.ராஜேந்தருக்கு தேவையான சிகிச்சை ஏற்பாடுகளை செய்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த டி.ராஜேந்தர் தற்போது உடல்நலம் குணமாகியுள்ளார். இதனால், அவரது மகன் சிம்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தடைந்தார்.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் இருந்து நாளை காலை டி.ராஜேந்தர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இத்தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…