தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாக வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி தொடரும் என்றும் வரும் பாராளுமன்ற தேர்தலில் இதே கூட்டணி தான் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி படுமோசமான தோல்வியடைந்து வரும் நிலையில் திமுக கூட்டணியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வருகிறது.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியை திமுக பிரிந்தால் தமிழகத்திலும் காங்கிரஸ் ஜீரோவாகி விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…