மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தற்போது அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் இருந்து ஒரு கடிதத்தை வெளியே அனுப்ப முயன்றபோது பிடிபட்டதால், மீண்டும் புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். ஒரு சிசிடிவி காட்சியில் அவர் நர்சிங் ஆர்டர்லி (ஒப்பந்த பணியாளர்கள்) மூலம் தனது கடிதத்தை வெளியே அனுப்ப முயன்றது தெரியவந்தது.
ஜெயிலில் இருந்து வெளியே உள்ள ஒரு குறிப்பிட்ட நபரிடம் கொடுக்கப்பட வேண்டிய காகிதத்தை சந்திரசேகரிடம் இருந்து நர்ஸ் வாங்கிய நிலையில், அது குறித்த காரணத்தை சிறை நிர்வாகம் கேட்டபோது நர்ஸ் முறையான பதிலை வழங்கவில்லை. இதன் மூலம் இந்த கடித பரிமாற்ற விஷயம் வெளியே தெரியவந்துள்ளது.
சந்திரசேகர் தற்போது சிறை எண் 3ல் அடைக்கப்பட்டுள்ளார். சந்திரசேகர் உண்ணாவிரதம் இருப்பதன் மூலமோ அல்லது பாதுகாப்பு முறையை மீறுவதன் மூலமோ திகார் அதிகாரிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்.
200 கோடி பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் விசாரிக்கப்பட்டு வரும் சுகேஷ் சந்திரசேகர், இப்போது திகார் சிறையின் பாதுகாப்பு முறையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பல கோடி மதிப்பிலான ஆடம்பர பொருட்களை பரிசாக கொடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரசேகர் தனது மனைவி லீனாவுடன் சொகுசாக வாழ்வதற்காக திகார் சிறை அதிகாரிகளுக்கு பதினைந்து நாட்களுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமமுக தலைவர் டிடிவி தினகரன் மற்றும் பலர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 2017 தேர்தல் கமிஷன் லஞ்ச வழக்கில் தொடர்புடைய மற்றொரு பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகம் ஏப்ரல் 4 ஆம் தேதி இந்த மோசடி மன்னனை கைது செய்தது.
முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் ப்ரோமோட்டர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் உட்பட சில முக்கிய நபர்களை ஏமாற்றி பணம் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில் அவரை கடந்த ஆண்டு கைது செய்ததில் இருந்து, 32 வயதான அவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…