இந்தியாவில் கொரோனா ஊடாடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலையானது உயர்ந்துகாணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சமையல் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலைகள் முதல் சமையல் எண்ணெய் வரை விலை அதிகரித்து வருகிறது.
இந்த சமையல் எண்ணெய் விலை உயர்வால் இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை தேவையான சமையல் எண்ணெயில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. ஆனால், ரஷ்யா உக்ரைன் போர், இந்தோனேசியா, மலேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை போன்றவற்றால் சமையல் விலை கடுமையாக உயர்ந்தது. இந்தோனேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு நீக்கப்பட்டதையடுத்து, சர்வதேச அளவில் விலை குறைந்தது. மத்திய அரசு பாமாயில் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியது.
இதை தொடர்ந்து இந்தியாவில் சூரியகாந்தி, சோயாபீன், மற்றும் பாமாயில் ஆகிய எண்ணெய்களின் சில்லறை விலை கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.10 முதல் 15 வரை குறைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளதால், விலையை மேலும் குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியது.
செய்தியாளர்களை சந்தித்த மத்திய உணவு செயலாளர் சுதன்சு பாண்டே, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 10 சதவீதம் குறைந்திருப்பதால், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வலியுறுத்தினோம். இதனால் சமையல் எண்ணெய் விலையை ரூ.15 வரை குறைக்க அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல் பெரும் உற்பத்தியாளர்கள், அடுத்த வாரத்துக்குள் பாமாயில், சோயாபீன், சன்பிளவர் ஆயில் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து எண்ணெய்களின் விலையை ரூ.15 குறைப்பதாக உறுதியளித்தனர் என்று தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…