UP Trending News : உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரபல யூட்யூபர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூட்யூபர் கவுரவ் தனேஜா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிறந்தநாளை உத்தர பிரதேச மெட்ரோ ரயில் நிலையத்தில் கொண்டாட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவரது பிறந்தநாளை கொண்டாடஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். மேலும், இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள டோக்கனும் அப்பகுதியில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில் நிலையம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பயணிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
மேலும், அப்பகுதியில் அதிக நெருக்கடி ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இந்த தடை உத்தரவை மீறி செயல்பட்டதால் கவுரவ் தனோஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…