Tamilnadu News Live : தமிழகத்தில் மீண்டும் கொரோனா 2 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை செய்யவுள்ளார்.
உலகத்தில் உள்ள சுமார் 110 நாடுகளில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருவதாக ஐ. நாடுகள் சபை தலைவர் நேற்று அறிவித்தார். இந்நிலையில், இந்தியாவிலும் தினந்தோறும் கொரொனாவால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,069 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொரோனா தொற்றைத் தடுப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலும், தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்து குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…