சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே 9 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 2 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கொரோனா தொற்று பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கல்வி நிலையங்களில் கொரோனா பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 160 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாடுமுழுவதும் கொரோனா பரவல் குறைந்து இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில் கல்விநிலையங்களில் கொரோனா பரவுவது மாணவர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பரிசோதனை முடிவுகள் வெளியானவுடன் மேலும் சிலருக்கு கொரோன பாதிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…