கண்டெய்னர் லாரி தீபிடித்த எரிந்த விபத்தில் சுமார் 1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரில் கண்டெய்னர் லாரி தீபிடித்து எரிந்ததில் சுமார் 1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. போலிவாக்கத்தில் இருந்து ஆன்லைன் வர்த்தகத்தின் வீட்டு உபயோக பொருட்களை கொண்டு சென்ற போது இந்த தீ விபத்து ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து காரணமாக பகுதி முழுவதும் சிறிது நேரம் புகை மண்டலமாக காட்சியளித்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…