உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் OYO ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமராக்களை வைத்து தம்பதிகளின் அந்தரங்க தருணங்களை பதிவு செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழு OYO அறைகளில் தங்கும் தம்பதிகளை மிரட்டி பணம் தராவிட்டால் வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இந்த மோசடியில் ஹோட்டல் ஊழியர்கள் ஈடுபடவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழுவின் உறுப்பினர்கள் OYO ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்ததாகவும், செக் இன் செது அறைகளில் மறைக்கப்பட்ட கேமராக்களை வைத்து, பின்னர் சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் அதே அறைகளில் செக் இன் செய்து கேமராக்களை எடுத்தனர். பின்னர் அவர்கள் இலக்கு வைக்கப்பட்ட தம்பதியை தொடர்பு கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
விஷ்ணு சிங், அப்துல் வஹாவ், பங்கஜ் குமார் மற்றும் அனுராக் குமார் சிங் ஆகிய நான்கு பேர் இந்த விவகாரத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுக்கள், அங்கீகரிக்கப்படாத கால் சென்டர்கள், சட்டவிரோத செயல்களுக்கு போலி சிம்கார்டுகளை வழங்குதல் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களில் 11 மடிக்கணினிகள், 21 மொபைல்கள் மற்றும் 22 ஏடிஎம் கார்டுகள் உள்ளடங்குவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர், இந்த கும்பல் நாடு முழுவதும் செயல்படுவதாக கூறப்படுகிறது.
கும்பலைச் சேர்ந்த ஒருவர் தலைமறைவாக உள்ளதால், அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…