Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேசிய கொடியை அவமதித்த உ.பி. எம்எல்ஏ.. வழக்கு பதிவு செய்ய உத்தரவு!!

Sekar June 24, 2022 & 15:47 [IST]
தேசிய கொடியை அவமதித்த உ.பி. எம்எல்ஏ.. வழக்கு பதிவு செய்ய உத்தரவு!!Representative Image.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் உத்தரபிரதேசத்தில் புர்காசி தொகுதியின் ராஷ்ட்ரிய லோக் தல் (ஆர்எல்டி) எம்எல்ஏ அனில் குமார் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சிறப்பு எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. 

வழக்கை பதிவு செய்து ஏழு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிவில் நீதிபதி மூத்த பிரிவு மயங்க் ஜெய்ஸ்வால் புதிய மண்டி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். வழக்கறிஞர் எஸ்.கே தியாகி தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த நடவடிக்கை எடுத்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பெட்ரோல் பங்கில் அனில் குமார் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியதாக புகார் எழுந்தது. பின்னர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த எம்.எல்.ஏ, இது தவறு என்று கூறினார். அப்போது கொடியேற்றத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாந்து குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்