Kerala Latest News : கேரளாவில் உள்ள லுலு மாலில் நள்ளிரவு ஆஃபர் அறிவிக்கப்பட்டதால் எக்கச்சக்கமான மக்கள் குவிந்த சம்பவம் வைரலாகியுள்ளது.
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பல மாநிலங்களில் மக்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் பிரபலமான லுலு ஷாப்பிங் மாலில் நேற்று நள்ளிரவு ஆஃபர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த ஆஃபரில் பொருட்களை வாங்க அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக லுலு மால் நோக்கி படையெடுத்து வந்தனர்.
இதனால் லுலு மாலுக்குள் நிற்கவே இடம் இல்லாத அளவிற்க்கு மக்கள் கூட்டம் அலைமோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
மேலும், கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், கேரள லுலு மாலுக்குள் மக்கள் பலர் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டமாக குவிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…