உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக தலைவர் நுபுர் ஷர்மாவின் தலையை துண்டிக்கப் போவதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரேலி மூத்த காவல் கண்காணிப்பாளர் சத்யார்த் அனிருத் பங்கஜ் இது குறித்து கூறுகையில், ஐடி சட்டத்தின் கீழ் நசீர் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
நசீர் என அடையாளம் காணப்பட்ட நபர் ஒரு வீடியோவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக தலைவர் நுபுர் சர்மா தலையை துண்டிப்பதாக மிரட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
முன்னதாக நூபுர் ஷர்மாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக அஜ்மீர் தர்கா காதிம் சல்மான் சிஷ்டியை ராஜஸ்தான் போலீசார் ஜூலை 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…