சிவகங்கை மாவட்டம், கல்லூரி சாலை இந்திரா தெருயில் வசித்து வருபவர் சக்திவேல். லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நம்பீஸ்வரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு திவ்யஸ்ரீ என்கிற மகளும் வேல்பாண்டி என்கிற மகனும் உள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்திவே தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதே போல நேற்று மாலையும் வழக்கம்போல் மது அருந்தி விட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் சந்திவேல் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து நம்பீஸ்வரியை வெட்டியுள்ளார், பின்னர் இவரின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நம்பீஸ்வரியைமீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி அழைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார், இதனையடுத்து சக்திவேல் தானாக நகர் காவல்நிலையத்தில் சரணடைந்தார், மாற்றுத்திறனாளி மனைவியை கணவன் குடித்துவிட்டு சரமாரியாக வெட்டியா சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…