திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கெங்காபுரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே வந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள பெண்களிடம், மாமியார் மருமகள் பிரச்னை தீர, நாஜிகள் இரட்டிப்பாக கிடைக்க மாந்த்ரீகம் செய்து தருவதாக கூறி வீட்டில் இருக்கும் தங்கங்களை தரும்படி கூறியுள்ளார்.
இளைஞரின் அந்த வார்த்தையை நம்பிய அப்பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண் வீட்டில் இருந்த 4 சவரன் நகையை அந்த இளைஞரிடம் கொடுத்து இரட்டிப்பாக மாற்றி தரும்படி கூறியுள்ளார். நகையை வாங்கிய அந்த இளைஞர், சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் சுற்றிலும் நோட்டமிட்டுவிட்டு, அந்த 4 சவரன் தங்கநகையை ஏமாற்றி எடுத்துக்கொண்டு, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் அறிந்து கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை அடிப்படையாக கொண்டு நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிய நபரை தேடிவருகின்றனர். காவல்துறையினர் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தும் ஆசை வார்த்தைகளை நம்பி பொதுமக்கள் இவ்வாறு ஏமாந்து வருவது வாடிக்கையாக உள்ளது இனியாவது இதுபோன்ற வார்த்தைகளை நம்பி வீட்டில் உள்ள நகையை பொருளையோ தெரியாத நபர்களிடம் கொடுக்க வேண்டாம் என போலீசார் கூறியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…