சென்னையில் இளைஞர்கள் சிலர் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டிக் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது., இந்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ரவுடிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு பட்டகத்தி மூல பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு செய்பவர்களை போலீசார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள், இளைஞர்களை காவல் துறையினர் பிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் சென்னையில் பட்டா கத்தி மூலம் கேக் வெட்டி இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விடியோவை அடிப்படையாக வைத்து சைபர் கிராம் போலீசார் உதவியுடன் காவல்துறையினர் அந்த விடியோவில் இருப்பது யார் என தேடி வருகின்றனர். முதல்கட்டமாக சென்னை திருமங்கலம் பகுதியில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெறிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து மற்றவர்களுக்கு உதவும் வகையில் எதாவது உருப்படியான செயல்களில் ஈடுபடுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…