கோவாவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அவரின் ஆண் நண்பரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் கணேஷ் விர்னோத்கர். இவர் மே மாதம் 9ம் தேதி ஸ்ரேயா என்பவருடன் சேர்ந்து கோவாவிற்குச் சென்றுள்ளார். அங்கு சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். இந்நிலையில் மே 13ஆம் தேதி அறையை விட்டு வெளியேறிய கணேஷ் மீண்டும் அறைக்கு திரும்பவில்லை. மேலும் அவர் அறையை வெளிப்பக்கமாக பூட்டி சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது அறையின் உள்ளே அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விடுதி ஊழியர்களிடம் விசாரித்ததில் அந்த நபர் குறித்த எந்த தகவலும் இல்லை என கூறியுள்ளனர். இதனையடுத்து நடந்த தீவிர விசாரணையில் கணேஷ் விடுதிக்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்தியது தெரியவந்தது, அந்த எண்ணை வைத்து விசாரிக்கும்போது கணேஷ் மஹாராஷ்டிராவில் இருப்பது தெரியவந்தது.
அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதில் மே 10ம் தேதி ஸ்ரேயாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது. பிறகு அடுத்த நாள் நான் அறையைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டேன். அவர் உயிரிழந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். இதன் காரணமாக ஸ்ரேயா எப்படி இறந்தார் என்பது குறித்து சரிவர தெரியாததால் போலீசார் கணேஷை தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…