Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோரதாண்டவம் ஆடிய மாண்டஸ்; திருவண்ணாமலை நிலவரம் என்ன? 

Kanimozhi Updated:
கோரதாண்டவம் ஆடிய மாண்டஸ்; திருவண்ணாமலை நிலவரம் என்ன? Representative Image.

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்ததை அடுத்து திருவண்ணாமலை மாவட்டம் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.30 மணிக்கு கரையைக் கடந்தது. இதனால் வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமம் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. 

வந்தவாசி அடுத்த மும்முனி, ஆயிலவாடி, பிருதூர், கல்லாகுத்து உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்  சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் துரிதமாக இறங்கி ஜேசிபி இயந்திரம், மரம் அறுக்கும்  இயந்திரம்  கொண்டு சாலை ஓரத்தில் விழுந்த மரங்களை அகற்றி வருகின்றனர். மரங்கள் விழும் போது மின் வயர்கள் பாதிக்கப்பட்டதால் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 


அத்துடன் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் ஆனது தற்போது கரையை கடந்த நிலையில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்