Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவளத்தை பந்தாடிய மாண்டஸ்; கண்ணீர் கடலில் மீனவர்கள்! 

Kanimozhi Updated:
கோவளத்தை பந்தாடிய மாண்டஸ்; கண்ணீர் கடலில் மீனவர்கள்! Representative Image.

மாண்டஸ் புயல் காரணமாக கோவளம் பகுதி கடும் சேதங்களை சந்தித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயலானது நேற்று இரவு மாமல்லபுரம் பகுதியில் கரையை கடந்தது.  அப்போது அதிகபட்சமாக 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

 

இதனால் புயல் கரையைக் கடந்த மாமல்லபுரத்திற்கு 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கோவளம் பகுதியானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

சுற்றுலாத்தலமான கோவளம் பகுதியில் கடற்கரையை சுற்றி பார்க்க வரும் பொது மக்களுக்கு பொருட்கள் விற்பனை செய்வதற்காக இங்கிருக்கும் கோவளம் பகுதி பெண்களால் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் மொத்தமாக சூறைக்காற்றால் சேதம் அடைந்துள்ளன. 

 

மேலும், இங்கு இருக்கும் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் 150 க்கும் மேற்பட்ட இன்ஜின்கள் பொருத்தப்பட்ட சிறிய படகுகள் நேற்று வீசிய பலத்த காற்றினால் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்துள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த 500 மீனவ குடும்பங்கள், சேதங்களை கணக்கெடுத்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்