Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sitrang Cyclone: சிட்ராங் புயல் இந்த பகுதியில் எல்லாம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

Nandhinipriya Ganeshan October 19, 2022 & 14:36 [IST]
Sitrang Cyclone: சிட்ராங் புயல் இந்த பகுதியில் எல்லாம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..Representative Image.

வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் புயல் தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு "சிட்ராங்" என பெயரிடப்பட்டுள்ளது. 

அதாவது அந்தமான் ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது அக்டோபர் 20ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். பிறகு இந்த தாழ்வு பகுதியானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும். பின்பு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அக்டோபர் 22ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை உள்ளது.

அதன்படி தமிழகத்தில் அக்டோபர் 22ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தீபாவளி கொண்டாடப்படுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்