டூ-வீலர் ஷோரூம் ஒன்றில் ஒரு எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து சிதறியதான் மூலம் மற்ற அணைத்து ஸ்கூட்டர் களும் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து காணப்படுவதால் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசும் குறையும் என்பதால் மின்சார வாகனங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளன. அண்மைக் காலமாக நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றின் பேட்டரிகள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழ்கிறது. முக்கியமாக மின்சார இரு சக்கர வாகனங்களில் இந்தப் பிரச்னை அதிகம் உள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் நாகுரியில் ஹமீத் என்ற நபருக்குச் சொந்தமான ஸ்மார்ட் சிட்டி மோட்டார்ஸ் என்ற ஒகினாவா டீலர்ஷிப் விற்பனை மையம் உள்ளது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் பேட்டரி வெடித்ததால் அது சிதறி மற்ற பைக்குகளிலும் தீயில் வெடித்து சிதறிதுது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர் பல லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டர்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. ஷோரூம் எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…