தீபக் சாஹர் - ஜெயா பரத்வாஜ் திருமணம் ஆக்ராவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர், இவர் இந்திய அணி வீர என்பதை விட ஐபில்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் என்பதே அனைவர்க்கும் மிகவும் பரிச்சயமான ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த ஐபிஎல் 15-வது சீசனில் காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை. அது அணிக்கு பெரும் பின்னடைவாகவே இருந்தது. இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலியான ஜெயா பரத்வாஜை இன்று திருமணம் செய்துகொண்டார்.
2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஒரு போட்டியின்போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலே சம்மதம் தெரிவிக்க இவர்கள் கடந்த ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் தீபக் சாஹர் - ஜெயா திருமணம் ஆக்ராவில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் இன்று நடந்துமுடிந்துள்ளது. இந்த திருமணத்தில் ராகுல் சாஹர் மற்றும் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர். இவர்களது திருமண வரவேற்பு விரைவில் டெல்லியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…