குஜராத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழகம் புறக்கணித்துள்ளது.
நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. அதற்கென தனி குழுக்கள் அமைத்து ஆய்வுகள் மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது மற்றும் பாடத்திட்டம் மாற்றி அமைப்பது குறித்து இன்று மற்றும் நாளை குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நாடு முழுவதும் உள்ள கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள கல்வி அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் தமிழக அரசு புறக்கணித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். மேலும் கல்வித்துறை சார்த்த தமிழக அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.
ஏற்கனவே தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசிற்கும் புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்துமோதல்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இவ்வாறு கல்விமாநாட்டை புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…