தெருவில் சுற்றிக் கொண்டிருந்த கர்பிணி நாயை அடித்தே கொன்ற வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி அனைவரையும் பதற வைக்கிறது.
டெல்லி நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் கர்ப்பிணி நாய் ஒன்றை நான்கு கல்லூரி மாணவர்கள் இரக்கமின்றி அடித்து கொன்றுள்ளனர். இந்த கொடூர செயலை செய்ததோடு அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்யும் போது ஓக்லாவில் உள்ள டான் போஸ்கோ தொழில்நுட்பக் கழகத்தின் மாணவர்கள் 4 பேரும் செல்லும் போது விடாமல் அந்த நாய் குரைத்தால் ஆத்திரத்தில் கொன்றதாக கூறியுள்ளனர்.
அந்த வீடியோவில் 4 பேரும் கர்பிணி நாயை வீட்டில் அடைத்து வைத்து, பேஸ்பால் மட்டைகள், மரக்குச்சிகள் மற்றும் இரும்புக் கம்பிகளை கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். ஒருவர் அந்த நாயை அடிக்க மீதி மூன்று பேர் அவனை ஊக்குவித்தனர். இது போன்ற இறக்க மற்ற சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…