டெல்லியில் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் ஒரு கர்ப்பிணி நாயை அடித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்த இரக்கமற்ற செயலை கல்லூரி மாணவர்கள் செய்து அதை வலைத்தளங்களில் பதிவிட்டது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
ஒரு உயிரை மதிக்காமல் நெஞ்சை பதறும் அளவு ஒரு செயல் டெல்லியில் நடந்துள்ளது. ஆம், மனிதனை துன்புறுத்தினால் தான் குற்றமா மிருகங்களுக்கு இல்லாயா..? என்பதுபோல் உள்ளது இந்த சம்பவம். இந்த சம்பவம் இன்றைய இளைஞர் மனதில் இரக்கம் இல்லையா என்னும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.
டெல்லியில் பிரபல கல்லூரி வளாகத்தில் கர்ப்பமாக இருந்த ஒரு தெருநாய் குரைத்து தொந்தரவு செய்ததால், சற்றும் இரக்கம் இல்லாமல் கொல்ல முடிவு செய்துள்ளனர். அதனால் கையில் கிடைத்த இரும்பு ராடு, மரக்கட்டை, பேட் கொண்டு நாய் இருந்த இடத்தை சுற்றி வளைத்து கொடூரமாக அடித்து கொன்றுள்ளனர். மேலும், இந்த கொடூர செயலை வீடியாவாக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு விலங்கு நல ஆர்வலர்கள் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை வைத்தனர். இதனால் மாணவர்கள் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் கோரிக்கை விடுத்தனர். இறுதியில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உலகில் நன்றியுள்ள ஜீவன் எனக் கருதும் ஜீவன் நாயாகும், அதி வீட்டின் உறுப்பினர் போல நடத்தும் மனிதர்கள் நடவில் இப்படியான மனிதர்கள் இருப்பது சற்று வேதனை அளிக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…