2023 ஜனவரி 1 ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. இந்த முறையும் ஆன்லைனில் பட்டாசு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு தடை விதிக்கப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று தெரிவித்தார்.
“இந்த முறை டெல்லியில் ஆன்லைன் பட்டாசு விற்பனை / விநியோகத்திற்கும் தடை விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும். தடையை கண்டிப்பாக அமல்படுத்த டெல்லி போலீஸ், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) மற்றும் வருவாய்த் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும்” என்று ராய் ட்வீட் செய்துள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளி, புத்தாண்டு மற்றும் பல பண்டிகைகளின் போது பட்டாசு வெடிப்பதற்கான தடை அமலில் இருக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக, வானிலை மாற்றங்கள், அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பெரிய அளவிலான விவசாய கழிவுகள் எரிதல் மற்றும் தீபாவளியின் போது பட்டாசு வெடித்தல் போன்ற காரணங்களால் அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து டெல்லியில் காற்றின் தரம் பல நாட்களாக அவசர நிலைக்கு சரிந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், தீபாவளிக்கு அடுத்த வாரத்தில் டெல்லியில் மாசு அளவு தொடர்ந்து மோசமான நிலையில் இருந்தது.
கடந்த ஆண்டு, டெல்லி அரசு செப்டம்பர் 28 முதல் ஜனவரி 1, 2022 வரை தேசிய தலைநகரில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க முழுமையான தடை விதித்து உத்தரவிட்டது. நகர அரசாங்கம் பட்டாசுகளை எரிப்பதற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த 'பதாகே நஹி தியே ஜலாவ்' பிரச்சாரத்தையும் தொடங்கியது.
மேலும் பட்டாசுகளை எரிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டும் அதே போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள டெல்லி அரசு முடிவெடுத்து பட்டாசுக்கு தடை விதித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…