நத்தம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்தையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தெரிவித்ததாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூலங்கள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்வதற்காக, வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் நாள் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று கூறினார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…