இந்த ஆண்டு தொடக்கத்தில் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ராஜதந்திர பாஸ்போர்ட்டை [diplomatic passport] ஒப்படைத்ததால், மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் புதிய பாஸ்போர்ட்டை வழங்குவதற்கு டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று அவருக்கு தடையில்லா சான்றிதழை (என்ஓசி) வழங்கியது.
பிரதமர் மோடி அவர்களின் குடும்ப பெயரை அநாகரிகமாக பேசியதாக முன்னாள் அமைச்சர் ராகுல் காந்தி அவர்கள் மீது வழக்கு தொடங்கப்பட்டது. அதன் காரணமாக அவர் MP பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது அவர் இந்தியாவை விட்டு வெளியீராமல் இருக்க diplomatic passport-ஐ ஒப்படைக்கும் படி கூறப்பட்டது. அவரும் அதனை ஒப்படைத்துவிட்டார்.
ஆனால் வரும் ஜூன் மாதத்தில் ராகுல் காந்தி அவர்கள் அமெரிக்காவிற்கு சென்று சில கூட்டங்களில் கலந்துகொள்ள மற்றும் கல்லூரி மாணவர்களிடம் உரையாற்ற செல்ல வேண்டும். காங்கிரசுக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு நாளிதழுடன் தொடர்புடைய பணமோசடி விசாரணையை சுட்டிக்காட்டிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் ஆட்சேபனையைத் தொடர்ந்து, பாஸ்போர்ட் வழக்கமாக வழங்கப்படும் காலமான 10 ஆண்டுகளுக்குப் பதிலாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்க நீதிமன்றம் அனுமதித்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…