டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கையில் தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்காட்லாந்தில் இருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு போயிங் ரக விமானம் சென்றது. இது டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது. அப்போது, திடீரென விமானத்தின் என்ஜின் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால், உடனே விமானி அவசர அவசரமாக பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். இங்கு பாதுகாப்பு குழுவினரின் உதவியுடன் பயணிகளைப் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தீப்பற்றி எரியும் விமானம் ஆனது, ஸ்காட்லாந்து விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது இன்ஜினில் சத்தம் கேட்டுள்ளது. இது வழக்கமாக கேட்கும் சத்தம் என நினைத்து விமானத்தை தொடர்ந்து இயக்கியுள்ளனர். ஆனால், நடுவானில் பறந்த பிறகு என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…