குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குடியரசுத் துணை தலைவர் பாஜக கூட்டணி வேட்பாளராக ஜெக்தீப் தங்கர் என்பவர் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா என்பவர் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா மத்திய அமைச்சராகவும் ஆளுனராகவும் பணியாற்றியுள்ள நிலையில் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…