நாகை: கீழ்வேளூர் அருகே புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வைத்திருந்த அரசு பள்ளி மாணவர்களை, ஆசிரியர் சலூனுக்கு அழைத்து சென்று முடி வெட்டினார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் தேவூரில் அரக மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 12ம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்கள் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வெட்டி பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இது போன்று முடி வைத்திருந்தனர்.
அவர்களை அழகாக முடி வெட்டி வரும்படி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுரை வழங்கி உள்ளனர். இதனை ஒரு சில மாணவர்கள் சட்டை செய்யாமல் புள்ளிங்கோ ஸ்டைலிலே பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் இன்று பள்ளி வந்த புள்ளிங்கோ மாணவர்களை வாசலிலே தடுத்து நிறுத்திய உடற்கல்வி ஆசிரியர் தேவூரில் உள்ள சலூன்கடைக்கு அழைத்து வந்து தங்களது சொந்த செலவில் 19 மாணவர்களுக்கு முடி வெட்டி உள்ளனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் சலூன் கடைக்கு முடி வெட்ட வந்த நபர்கள் அரசு பள்ளியில் நிர்வாகத்தை வெகுப்பாக பாராட்டி வருகின்றன. புள்ளிங்கோ மாணவர்களை ஆசிரியை சலூன் கடைக்கு அழைத்து வந்து முடி வெட்டி விட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…