அமெரிக்காவில் வசிக்கும் இளைஞரும் தமிழகத்தில் வசிக்கும் பெண்ணும் ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வம்சி சுதர்ஷினி என்பவரும், அமெரிக்க குடியுரிமை பெற்று அந்நாட்டில் வசிக்கும் ராகுல் எல் மது என்பவரும், இந்தியாவில் நடைமுறையில் உள்ள சிறப்பு திருமண சட்டத்தின் படி திருமணம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அந்த விண்ணப்பத்தின் மீது முடிவெடுப்பதற்கான கால அவகாசம் முடிந்த பின்னரும் சார்பதிவாளர் எந்த நடவடிக்கையும் எனக்கு வில்லை.
அதேநேரத்தில் இந்தியா வந்திருந்த ராகுல் எல் மது அமெரிக்க திரும்பிவிட்ட நிலையில், ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொள்ளவும், அதனை சிறப்பு திருமண சட்டத்தின்படி பதிவு செய்துகொள்ளவும் அனுமதி வேண்டும் என வம்சி சுதர்ஷினி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையில் திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என தெரிவித்ததோடு, திருமணத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்திக் கொள்ளவும், அதனை சிறப்பு திருமண சட்டத்தின்படி பதிவு செய்யவும் அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…