சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆடி மாதம் அமாவாசையன்று கோலாகளமாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆடி அமாவாசை விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா ஜூலை 28ம் தேதியன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் சதுரகிரி மலையேற ஜூலை 26ம் தேதி 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல கட்டுப்பாட்டு விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…