Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்... இயக்குனர் பா ரஞ்சித் ஆவேசம்...

Muthu Kumar July 17, 2022 & 23:45 [IST]
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்... இயக்குனர் பா ரஞ்சித் ஆவேசம்...Representative Image.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த பள்ளி மாணவி கடந்த சில தினங்கள் முன்னதாக பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

இந்நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து, பள்ளி மாணவியின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும்  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதன்படி, இச்சம்பவம் குறித்து பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில், 
“தமிழக அரசே குற்றவாளிகளை கைது செய்! கள்ளக்குறிச்சி, சக்தி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலில் காயங்கள் இருப்பதாக உடற்கூறு ஆய்வு அறிக்கை தெரிவித்தும் ஏன் பள்ளியின் மேல் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? ” என பதிவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்