Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி போலீஸ்ன்னு சொல்லி இதை பண்ணா? - டிஜிபி சைலேந்திர பாபு கடும் எச்சரிக்கை!

KANIMOZHI Updated:
இனி போலீஸ்ன்னு சொல்லி இதை பண்ணா? - டிஜிபி சைலேந்திர பாபு கடும் எச்சரிக்கை!Representative Image.

இனி இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது, ஹெல்மெட் அணியாவிட்டால் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்துசெல்வோர், 'ஹெல்மெட்' அணிவது கட்டாயம். மீறுவோருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது இதனால், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்டநகரங்களில்90 சதவீதம் பேர், ஹெல்மெட் அணிந்துவாகனம் ஓட்டுகின்றனர்.


பின், இருக்கையில் அமர்ந்து செல்வோரில், 10 சதவீதம் பேர் தான் ஹெல்மெட் அணிகின்றனர் என, போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். கிராமங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள, சிறு நகர பகுதிகளில், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மிகவும் குறைவு.

இதனால், ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்தபோலீசாரிடம், வாகனத்தைபறிமுதல் செய்ய வேண்டும். ஹெல்மெட் வாங்கிவந்து காண்பித்த பின் தான், வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. வாகன சோதனையில் ஈடுபடும், போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசாருக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

'போலீஸ்' என்ற அடையாளத்தை காரணமாக கூறி, வாக்குவாதம் செய்வோர் மீது, வழக்கு பதிந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது துறை ரீதியாக மட்டுமல்லாமல், வழக்கு பதிவும் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்