குஜராத்தில் ஓடும் பேருந்தில் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
குஜராத் மாநிலம் சோட்டா உடேபூரைச் சேர்ந்த அம்ருத் ரத்வா, சூரத் மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி மங்குபென். இவர் அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார்.
மங்குபென் பிகாபூர் கிராமத்தில் நடத்துனராக பணியாற்றிய வந்த நிலையில், அவருக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கலாம் என அம்ருத் ரத்வா சந்தேகப்பட்டுள்ளார். கணவன், மனைவில் இருவரும் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவு தள்ளி வேலை பார்ப்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி செல்போனில் சண்டை வெடித்துள்ளது.
சம்பவத்தன்றும் மங்குபெனிடம் அம்ருத் செல்போனில் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பிகாபூர் வந்துள்ளார். அங்கு தனது மனைவி வேலை பார்க்கும் பேருந்தில் ஏறிய அவர், நடந்துனர் இருக்கையில் அமர்ந்திருந்த மங்குபென்னை வேகமாக நெருங்கி அவருடைய கழுத்தை கையில் இருந்த கத்தியால் அறுத்துள்ளார்.
இதில் அலறித்துடித்த மங்குபென் ரத்த வெள்ளத்தில் மரணமடைந்தார்.அத்துடன் போலீசார் வரும் வரை மங்குபென் சடலத்திற்கு அருகிலேயே அமர்ந்துள்ளார். ஓடும் பேருந்தில் நடத்துநரை கணவரே கணவரே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…