தமிழகத்தில் டெங்குக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்களை தீவிரப்படுத்துமாறு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எலி காய்ச்சல் மற்றும் டெங்குக் காய்ச்சல் அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநிலத்தையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் தீவிரப்படுத்துமாறு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு பொதுசுகாதாரத்துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, இருமாநில எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்தவும், மேல் நிலை மற்றும கீழ்நிலை நீர் தொட்டிகளில் குளோரின் கலந்து தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால், ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை இயக்குநர்அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…