தமிழகத்தில் அரசுப் பணிகளில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையின் போது, வேலைவாய்ப்பகங்கள் மூலம் நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில் கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள், தமிழக அரசுப் பள்ளிகள் தமிழ் மொழியின் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதில், தமிழக அரசு 2010-2011ம் கல்வியாண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச்சாரள முறையில் தொழிற்கல்வி பயில தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலும் அந்த மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசுப்பணிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…