டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 7 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவின் இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே 2 முறை கருச்சிதைவு, ஒரு முறை பிறந்த குழந்தை இறப்பு என துயரத்தில் துடித்த பெண், இம்முறை குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பினார்.
அவரை பரிசோதனை செய்த மகப்பேறு மற்றும் இதயவியல் மருத்துவர்கள், பலூன் மூலம் அடைப்பை விரிவடைய செய்யும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள முன்வந்தார்கள். அதன்படி, தாயின் அடிவயிற்று வாயிலாக குழந்தையின் இதயத்திற்கு பலூனை கொண்டு சென்று அடைப்பை சரிசெய்திருக்கிறார்கள். திராட்சைப் பழம் அளவிலான இதயத்தில் மிகவும் சிக்கலான அறுவைச் சிகிச்சையை 90 நொடிகளில் மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்துள்ளனர்.
ஒரு அரசு மருத்துவமனையில் இப்படியொரு சிக்கலான அறுவைச் சிகிச்சையை செய்தது இதுவே முதல் முறையாகும். சிகிச்சையில் தாயும், சேயும் நலமாக உள்ளார்கள் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இந்திய மருத்துவர்களை பெருமைப்படுத்தும் விதமாக சாதனை படைத்த அம்மருத்துவர்களை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…