தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 39 பேருக்கு தொற்று கண்டறியபட்ட நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 40 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 10 பேருக்கும், செங்கல்பட்டில் 4 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், திருச்சியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் கொரோனா தொற்றால் கடந்த மார்ச் 11ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
எனவே, மீண்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…