திருப்பத்தூரை அடுத்த வாணியம்பாடியில் செல்லப்பிராணியாக நாய் தங்களது ஆட்டுக்குட்டியை கடித்ததாக கூறி நாயின் உரிமையாளரை பஞ்சாயத்தில் வைத்து அடித்து துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாப்பா நேரி பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி தேன்மொழி என்பவர் தனது வீட்டில், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இதேபோல் வேப்பமர சாலை பகுதியை சேர்ந்த பவுன் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனது ஆடுகளை தேன்மொழி வீட்டின் அருகே விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளார்.
அப்போது அங்குவந்த தேன்மொழியின் நாய் ஒரு ஆட்டை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. இதற்கு நஷ்டஈடு கேட்டு தேன்மொழி வீட்டிற்கு சென்று பவுன் மற்றும் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நஷ்டஈடு தரமுடியாது என தேன்மொழி மறுக்கவே பஞ்சாயத்தை கூடியுள்ளனர் பவுன் குடும்பத்தினர்.
அப்போது பஞ்சாயத்தார் பேசிக்கொண்டிருக்கையில் பவுன் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து தேன்மொழியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தேன்மொழியை அவரது உறவினர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
வளர்ப்பு நாய் ஆட்டை கடிதத்தின் காரணமாக நாயின் உரிமையாளரை பஞ்சாயத்தில் வைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…