Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ளக்குறிச்சி கலவரம்... கரூரை சேர்ந்த 4 பேர் கைது..!

madhankumar July 18, 2022 & 12:14 [IST]
கள்ளக்குறிச்சி கலவரம்... கரூரை சேர்ந்த 4 பேர் கைது..!Representative Image.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை தொடர்பாக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்து சம்மந்தப்பட்ட பள்ளி சூறையாடப்பட்டு பள்ளி பேருந்துகளும், போலீஸ் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

மேலும் இதில் 55 போலீசார் காயமடைந்துள்ளனர் இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக இன்று காலை வரை 329 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்டதாக கூறி கரூரை சேர்ந்த 4 இளைஞர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்