நெருப்புடன் விளையாடாதீர்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அமரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த வியாழக்கிழமை அன்று செல்போனில் சுமார் 2 மணி நேரம் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தைவானை சொந்தம் கொண்டாடும் விஷயத்தில் இருந்து சற்று விலகி இருக்குமாறு பைடன் ஜின்பிங்கிடம் கூறியதாகவும் அதற்கு நெருப்புடன் விளையாடாதீர்கள் என சீன அதிபர் ஆவேசமாக எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தைவான் பிரச்னை தொடர்பாக கடந்த நபவம்பர் அன்று பைடனை சீன அதிபர் எச்சரித்த நிலையில் தற்போதும் கடுமையாக எச்சரித்துள்ளார் தாய்வானின் சுதந்திரம் தொடர்பாக அந்நிய சக்திகள் தலையீட்டை சீனா உறுதியாக எதிர்ப்பதாக சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…