சென்னையில் வரும் 28, 29 ஆகிய இரண்டு நாட்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்துள்ளதாக சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.
சென்னையில் வரும் 28-ம் தேதி நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
இந்நிலையில், ஜூலை 29-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தகச்வல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, பிரதமர் வருகை காரணமாக அவருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும் பிரதமரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூலை 28,29 ஆகிய தேதிகளில் சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…