தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 18 பேரை டெல்லி போலீஸ் கைது செய்தது
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி 2வது முறையாக இன்று டெல்லி அமலாக்கத்துறை முன் ஆஜரானார். இந்நிலையில் அமலாக்கத்துறையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். அப்போது காங்கிரஸ் எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்பட 18 பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…